ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
2016ம் ஆண்டில் இதுவரை அதிகப் படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வருடத்திற்குள்ளாக அவர் நடித்துள்ள மேலும் இரண்டு படங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருக்கும் 'இடம் பொருள் ஏவல், மெல்லிசை' ஆகிய இரண்டு படங்களையும் தீபாவளி கழித்து வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனிடையே கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்திற்கு 'கவண்' எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் படம் எப்படியும் அடுத்த வருடம்தான் வெளியாகும்.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி 'ரேணிகுண்டா' பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படத்திலும், புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 'விக்ரம் - வேதா' என்ற படத்திலும் நடிக்க உள்ளார். பன்னீர் செல்வம் படத்திற்காக விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்க தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் முன்னரே நடிக்க சம்மதித்த படங்கள் காரணமாக நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள். சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினால்தான் கீர்த்தி சுரேஷ், விஜய் சேதபதி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
மேலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ள இந்தப் படத்தை 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கப் போகும் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. இடையில் சூர்யா படம் இயக்க வாய்ப்பு வந்ததும், விஜய் சேதுபதி படத்தை இயக்குவதில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். அவர்தான் கீர்த்தி சுரேஷை விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டாம் என்று சொன்னதாகவும், அதோடு அந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நயன்தாராவையும் நடிக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் சூர்யா ஜோடியாக நடிக்க அவர் கேட்ட தொகையை அப்படியே தர தயாரிப்பு நிறுவனம் சம்மதித்ததும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.