ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர் நடித்துள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. இப்படத்தில் ரன்பீருடன் அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய், பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் இந்தியா-பாக்., பிரச்னையால் ரிலீஸாகுமா...?, ஆகாதா...? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் நிச்சயம் இந்தப்படம் தனக்கு ஒரு வெற்றியை தரும் என நம்புகிறார் ரன்பீர். ரன்பீரின் முந்தைய படங்கள் எதுவும் சரியாக போகாததால் கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை எனும் ஆவலில் ஏய் தில் ஹே முஷ்கில் படத்தை பெரிதும் நம்பியுள்ளார் ரன்பீர்.
இதுகுறித்து ரன்பீர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‛‛என்னுடைய முந்தைய படங்கள் சரியாக போகாததால் என்னுள் ஒருவித மனஅழுத்தம் இருப்பது உண்மை தான். பாக்ஸ் ஆபிஸில் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். ஒரு வெற்றி கிடைத்துவிட்டால் போதும் சிறையிலிருந்து வெளிவந்த உணர்வை மட்டுமல்லாது எனக்கு ஒரு அமைதியான மனநிலையையும் தரும்'' என்று கூறியுள்ளார்.