ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் இயக்கி, தயாரித்துள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாக்., நடிகர் பவாத்கான் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆனால் படத்தில் பாகிஸ்தான் நடிகர் நடித்திருப்பதால் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி திரையிடப்படும் தியேட்டர்களை புகுந்து தாக்குவோம் என சில அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஏய் தில் ஹே முஷ்கில் திரையிடப்படும் தியேட்டர்களில் பாதுகாப்பு கோரி படக்குழு சார்பில் மும்பை போலீஸ் துணை கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை ஏற்று கொண்ட மும்பை துணை கமிஷனர் அசோக் துதி, உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால், ஏய் தில் ஹே முஷ்கில் படம் போலீஸ் பாதுகாப்புடன் ரிலீஸாக உள்ளது.