Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாக்., நடிகர்களை வைத்து இனி படம் இயக்கமாட்டேன் - கரண் ஜோகர்

19 அக், 2016 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Finally-Karan-Johar-breaks-his-silence

பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் இயக்கி, தயாரித்துள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாக்., நடிகர் பவாத்கான் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆனால் யூரி தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பெரிய விரிசல் விழுந்துள்ளது.


இப்படத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஃபவத் கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதால் இத்திரைப்படத்தை வெளியிட இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சினிமா உரிமையாளர்கள் சங்கத்தினர் தடை விதித்துள்ளனர். இதனால் படம் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார் கரண் ஜோகர்.


அதில் கரண் ஜோகர் கூறியிருப்பதாவது... நான் நாட்டிற்கு துரோகம் செய்து விட்டது போல் சிலர் பேசுவது வேதனை அளிக்கிறது. தாய்நாட்டிற்கு முன்னர் வேறு எதுவும் எனக்கு முக்கியமல்ல, அன்பின் வாயிலாக நான் என் நாட்டுப்பற்றை எனது பணிகளில் வெளிப்படுத்தி வருகிறேன். ஏய் தில் ஹே முஷ்கில் படமாக்கப்பட்டபோது இருந்த சூழல் வேறு, இப்போது இருக்கும் சூழல் வேறு. தற்போதைய நிலையை நானும் அறிவேன். நம் நாட்டிற்கு அச்சுறுத்தும் எந்த பயங்கரவாத செயலையும் நான் ஒருபோது ஆதரிக்க மாட்டேன், வன்மையாக கண்டிக்கிறேன். நம் மக்களை எல்லையிலிருந்து பாதுகாக்கும் நமது வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். இனி பாகிஸ்தான் நடிகர்களை வைத்து நான் படம் இயக்கப்போவதில்லை. அதேசமயம் இந்தப்படத்தில் நம் நாட்டை சேர்ந்த 300 பேர் தங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைத்துள்ளார்கள். அவர்களின் உழைப்புக்கு இதுபோன்று தடங்கல் செய்வது முறையல்ல என்று கூறியுள்ளார்.


கரண் ஜோகரின் இந்த பதிவிற்கு பின்னராவது ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்திற்கு தடை விலகுமா... என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in