சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‛த்ரிஷ்யம்'. இப்படம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீ-மேக்காகி வெற்றி பெற்றதோடு ஹிந்தியிலும் அஜய்தேவ்கன் நடிப்பில் அங்கும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. தற்போது அஜய், தனது சிவாய் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படுபிஸியாக உள்ளார். இதனிடையே சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஜய்யிடம், த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருக்கிறதா.? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அஜய், ‛‛சில படங்களுக்கு இரண்டாம் பாகம் தேவைப்படாது. ஆனால் எதிர்காலத்தில் நல்ல கதையுடன் ஒரு சூழல் வந்தால் சில படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகும். ஆனால் த்ரிஷ்யம் மாதிரியான படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாவது என்பது சற்று சிரமமான ஒன்று. அதேசமயம் ஒரு த்ரிஷ்யம் 2 படத்திற்கு ஒரு பவர்புல்லான கதை உருவானால் அதற்கான வாய்ப்பு உள்ளது'' என்றார்.