ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தான் ஹீரோவாவதற்கு முன்புவரை இசையமைத்த எந்த படத்திலும் பழைய ஹிட் பாடல்களை ரீ-மிக்ஸ் செய்ததில்லை. ஆனால், ஹீரோவான பிறகு இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் ரீமிக்ஸ் செய்தார். அந்த படத்தில் கண்ணை நம்பாதே என்ற எம்ஜிஆர் பாடலையும், சந்திரபாபுவின் ஒரு பாடலையும் ரீமிக்ஸ் செய்திருந்தார்.
அதுபற்றிஅவர் கூறும்போது, இசையமைக்க போதிய நேரமில்லாததால் திடீரெ ன்று நான் ரீமிக்சில் இறங்கவில்லை. இதெல்லாம் சின்ன வயதில் இருந்தே என்னை அதிகமாக பாதித்த பாடல்கள். நான் நடிக்கிற படம் என்பதால் டைரக்டரிடம் பேசி இந்த பாடலை ரீமிக்ஸ் செய்தேன் என்றார். அதேபோல் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் தான் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் நவராத்திரி படத்தில் சிவாஜி பாடும் இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் -என்ற பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.