ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆனந்தன் இயக்கி வரும் படம் மேச்சேரி வனபத்ரகாளி. ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த பக்தி படத்தில் தினம் தினம் டாஸ்மாக்கே கதியென்று கிடக்கும் குடிமகன்களுக்கு அட்வைஸ் செய்யும் வகையில் ஒரு தத்துவப்பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலை ராணிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் எழுதியுள்ளார்.
அந்த பாடல் குறித்து அவர் கூறுகையில், இன்றைக்கு 90 சதவிகிதம் பேர் குடிக்கிறாங்க. சந்தோசம், துக்கம் எதுவானாலும் குடிக்கிறாங்க. சம்பாதிக்கிறதுல 70 சதவிகிதத்தை டாஸ்மாக்குலதான் கொண்டு கொடுக்கிறாங்க. இதனால குடும்பமும் வறுமையில வாடுது. அவங்களோட உடம்பும் கெட்டுப்போவது.
இதை மையமாக வைத்து,
சாக்குபோக்கு சொல்லிகிட்டு சாக்கடையில் தூங்கிகிட்டு
நாள்தோறும் குடிச்சிக்கிட்டு நீயும் கெடக்குறே
கட்டிய பொண்டாட்டிய ரோட்டுலதான் தவிக்க விட்டே
குழந்தை குட்டிகளை பசியில துடிக்க விட்டே
வாழும் வயசினிலே திருந்தி வாழ பாக்கல
சாகுற வயதினிலே வாழனும்னு பார்க்கிறே.
கவலைய மறக்கனும்னு நீதான்டா குடிக்கிறே.
எமனை மாலை போட்டு நீ ஏன்டா அழைக்குறே.
-என்று இந்த பாடலின் பல்லவி அமைந்துள்ளது. இந்த பாடலைக்கேட்டு விட்டு நூற்றில் ரெண்டு பேர் குடிக்கிறதில் இருந்து விடுபட்டு திருந்தினாலும் போதும். இப்படியொரு பாடலை எழுதியதில் மனசுக்கு நிறைவாக இருக்கும் என்கிறார் பாடலாசிரியர் கார்த்திகேயன்.