ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தசம்பவத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நிகழ்த்தியாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் நடிகர்களான பவாத்கான், மகிரான் ஆகியோர் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கூறியிருந்தது. மேலும் பா.ஜா., கட்சியினரும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பவாத்கான் மற்றும் மகிராவிற்கு இயக்குநர் விக்ரம் பட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்பதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்து தான் வருகிறது, நிறையபேர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் நாமோ, கிரிக்கெட் வீரர்களையும், நடிகர்களையும் தடை செய்வதில் தான் குறியாக உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.