ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், கிஷோர், சதீஷ் நடித்துள்ள படம் றெக்க. காமன்மேன் பிக்சர்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரித்துள்ளார், ரத்தன் சிவா இயக்கி உள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் வெளியிட இயக்குனர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது: இந்த இடம் நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் (ரசிகர்கள்)கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி, போன வெள்ளிக்கிழமை ஒரு படம் ஆண்டவன் கட்டளை வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டு விழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம் நேரம் அப்படி அமைந்தது தானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது.
முதலில் றெக்க மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன் முடியுமா என தயங்கினேன். முடியுமா என எனக்குள் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுந்தன ஆனால் சிவா கதை சொன்ன விதம் வசனம் பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. காற்றிலேயே படம் வரைந்து சிவா என்னென்னவோ செய்தார்.என்னைக் கவர்ந்தார்.
படத்தில் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால் பஞ்ச் டயலாக் பேசுவதுதான் சிரமமாக இருந்தது, கஷ்டப்பட்டேன்.இப்படத்தில் பஞ்ச்சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது. இயக்குநர் சிவா ஒரு நடிகனை புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்திருந்தார். நிறைய பேசத் தோன்றுகிறது ஆனால் பேச முடியவில்லை அவ்வளவு பதற்றமாக இருக்கிறேன். என்றார் விஜய் சேதுபதி.