ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமான படம் பராசக்தி. இந்த படம் தயாராகும்போதே இதற்கு போட்டியாக என் தங்கை என்ற படம் தயரானது அதில் நடித்தது எம்.ஜி.ஆர்.
பராசக்தி படம் தயாராவதற்கு முன்பு தமிழ்நாட்டில் பராசக்தி, என் தங்கை என்ற இரண்டு நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தது. இரண்டுமே அண்ணன், தங்கை பாசக் கதைகள். இரண்டு நாடகங்களையும் இணைத்து ஒரே கதையாக்கி அதனை பராசக்தி என்ற பெயரில் எடுக்க ஏவிஎம் செட்டியார் விரும்பினார். ஆனால் இதற்கு என்தங்கை நாடக ஆசிரியர் டி.எஸ்.நடராஜன் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஏவிஎம் செட்டியார் பராசக்தி நாடகத்தையே பராசக்தி படமாக எடுக்க முடிவு செய்தார். கருணாநிதி வசனம் எழுத சிவாஜி நடிக்க படம் ஆரம்பமானது.
இதை கேள்விப்பட்ட அசோக் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் என் தங்கை நாடகத்தை படமாக தயாரித்து பராசக்திக்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்தது. இதில் எம்.ஜி.ஆர் அண்ணனாகவும், இ.வி.சரோஜா தங்கையாகவும் நடித்தனர். கண்பார்வையற்ற தங்கைக்காக வாழ்கிறான் அண்ணன். அண்ணனுக்கு பாரமாக இருக்க கூடாது என்பதற்காக தங்கை செத்துப்போக அவள் பிணத்துடன் எம்.ஜி.ஆர் கடலுக்குள் இறங்குவதாக படம் முடியும். படம் முழுக்க அழுகையும், சோகமும்தான்.
1952ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை சி.எச்.நாராயண மூர்த்தி இயக்கினார். நரசிம்ம பாரதி, பி.எஸ்.கோவிந்தன், மாதுரிதேவி, சக்ரபாணி, எம்.என்.ராஜம் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சில மாத இடைவெளியில் என் தங்கையும், பராசக்தியும் வெளிவந்தது. கருணாநிதியின் வசனம், சிவாஜியின் நடிப்பு, அதிகமான நட்சத்திரங்கள், பிரமாண்ட தயாரிப்பால் பராசக்தி வெற்றி பெற்றது. சோக காட்சிகள் நிறைந்த என் தங்கை தோல்வி அடைந்தது.