ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் எஸ்.பி.முத்துராமனுக்கு நிகர் யாரும் கிடையாது. நேற்று நடந்த காகித கப்பல் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் வெற்றிமாறனை புகழ்ந்து பேசியதுடன் விசாரணை படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழ் சினிமா உலக அளவில் உயரும். விருது கிடைக்க நாம் பிரார்த்தனை செய்வோம் என்றார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: நான் 70 படம் இயக்கி இருக்கிறேன். அதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. என்னுடைய குழு. என்னுடைய 70 படத்திலும் ஒரே டெக்னீஷயன்கள் பணியாற்றினார்கள். இப்போது வரும் இளைஞர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். வெற்றிமாறன் போன்றவர்கள் வித்தியாசமான படத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார்கள். அதனால்தான் இப்போது வெற்றி மாறன் ஆஸ்கரின் கதவுகளை தட்டியிருக்கிறார்.
விசாரணை ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருப்பது அந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். விசாரணை ஆஸ்கர் விருதை பெற்றால் தமிழ் சினிமா உலக தரத்திற்கு உயரும். அதற்கு நிறைய போட்டிகள் இருக்கிறது. உலகம் முழுழுவதும் இருந்து படங்கள் வரும். அதையெல்லாம் தாண்டி விசாரணை விருதை பெற நாம் ஆண்டவனை பிரார்த்திப்போம். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்போம். நல்லதே நடக்கும். என்றார்.