14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இந்தி சீரியல்களை இறக்குமதி செய்யும் சேனல்கள், குடும்ப கதை, புராண கதைகளையே இறக்குமதி செய்கிறது. வேந்தர் டி.வி. சற்று வித்தியாசமாக இளமை ததும்பும் ஒரு கல்லூரி காதல் கதையை இறக்குமதி செய்துள்ளது.
கடந்த ஆண்டு எம்.டிவியில் ஒளிபரப்பான இந்தி தொடர் கைசி யா யாரியான். பிரபல இந்தி நடிகை நிட்டி டெய்லர், பரத் சமந்தான், யுவ்ராஜ் தாக்கூர், அயாஸ் அகமது, வீபா ஆனந்த் நடித்திருந்தனர். 337 எபிசோட்களை கொண்ட இந்த தொடரைத்தான் கல்லூரி பறவைகள் என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள்.
தாய் தந்தை இல்லாத நந்தினி விபத்தில் பேசும் சக்தியை இழந்த தம்பியை குணப்படுத்துவதற்காக மும்பை வருகிறார். படிப்பில் சுட்டியான நந்தினிக்கு கோடீஸ்வர வீட்டு வாரிசுகள் மட்டுமே படிக்கும் ரிச்சான கல்லூரியில் இடம் கிடைக்கிறது. வேலை பார்த்துக் கொண்டே அந்த கல்லூரியில் படிக்கிறாள். நந்தினி ஏழை என்பதால் அவளை எல்லோரும் கிண்டல் செய்கிறர்கள். குறிப்பாக கல்லூரி நிர்வாகியின் மகன் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு மாணவிகளுக்கு டார்ச்சர் கொடுப்பது, ஈவ் டீசிங் செய்வது என திரிகிறான். அவன் நந்தினியிடமும் தன் வேலையை காட்ட நந்தினி அவன் கன்னத்தில் அறைந்து விடுகிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது. என்பதுதான் கதை. நந்தினியா இந்தி நடிகை நிட்டி டெய்லர் நடிக்கிறார்.
திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது மறுநாள் பகல் 1.30 மணிக்க மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.