கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஷோபான நடிகைளில் வித்தியாசமானவர். தென்னிந்திய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இப்போதும் சினிமாவோடு நடனத்தையும் சேர்த்து காதலித்து வருகிறவர். சென்னையில் நடன பள்ளி நடத்தி வருங்கால சந்ததிகளுக்கும் நாட்டியத்தை போதித்து வருகிறார்.
ஷோபனாவின் நாட்டிய நாடகம் கிருஷ்ணா. ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த நாடகம் கிருஷ்ணனின் லீலைகளை ஆங்கில உரையுடன் நாட்டிய வடிவில் நடத்தப்படுகிறது. சினிமாவைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள். அதாவது ரேவதி முதல் ஷபனா ஆஸ்மி வரை இதற்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். ரசூல் பூக்குட்டி நாடகத்திற்கு சவுண்ட் டிசைன் செய்திருப்பது கூடுதல் அம்சமாகும்.
சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேறிய இந்த நாட்டிய நாடகம். அதன் பிறகு தமிழ்நாடு, மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, துபாய், அபுதாபி, குவைத், மலேசியா, சிங்கப்பூர், கென்யா ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்டது. தற்போது 100 மேடைகளை ஏறி சாதனை படைத்துள்ளது. கடந்த 25ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் 100வது காட்சி நடந்தது. அப்போதும் அரங்கம் நிரம்பி வழிந்தததுதான் ஷோபனாவின் சாதனை.