ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம். இது எந்திரன் இரண்டாம் பாகம். எமி ஹீரோயின், அக்ஷய்குமார் வில்லன். ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தற்போது 2.ஓவின் படப்பிடிப்புகள் 50 சதவிகிதம் முடிந்துள்ளது. 2017ம் ஆண்டு தமிழ் புத்தாண்டில் படம் வெளிவரலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் இப்போதே 2.ஓவின் புரமோசன்களை தொடங்கிவிட்டது. லைக்கா நிறுவனம் தற்போது நடந்து வரும் டிஎன்பில் கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை வாங்கி உள்ளது. இந்த அணி விளையாடும் போட்டியை பார்க்கும் ரசிகர்கள ஸ்டேடியத்தில் தங்களை செல்பி எடுத்து அதனை லைக்கா நிறுவனத்தின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இணைய தள பக்கத்திற்கு அனுப்ப வேண்டும். சிறந்த முறையில் செல்பி எடுத்த ரசிகர்கள் பிரமாண்டமாக நடக்க இருக்கும் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது.