ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சைத்தான் படத்தை வெளியிட்ட பிறகுதான் அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார் விஜய் ஆண்டனி. ஆனால், பிச்சைக்காரன் ஹிட் காரணமாக அவரை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்தது லைகா நிறுவனம். அதனால் ஏற்கனவே தன்னை வைத்து நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கரிடம் கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருந்த எமன் படத்தின் படப்பிடிப்பையும் உடனடியாக தொடங்கினார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை அவர் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக்கொடுக்கிறார்.
மேலும், ஏற்கனவே நடித்து வந்த சைத்தான் படப்பிடிப்புக்கு நடுவே அவ்வப்போது எமன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வந்த விஜய் ஆண்டனி இப்போது இறுதிகட்டத்துக்கு வந்து விட்டார். இன்னும் பத்து நாட்களில் எமன் படப்பிடிப்பு முடிந்து விடுமாம். அதோடு, தற்போது சைத்தான் படத்தின் இறுதிகட்ட வேலைகள் இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்க, அதற்கடுத்து தான் நடிக்க யிருந்த திருடன், ஹிட்லர் படங்களை தள்ளி வைத்து விட்டு, எமன் படவேலைகள் முடிந்ததும் இந்தி பிச்சைக்காரனில் நடிக்க தயாராகப் போகிறாராம் விஜய் ஆண்டனி. அந்த படம் தமிழில் நடித்த பிச்சைக்காரனை விட பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறதாம்.