ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிரமாண்ட படமான பாகுபலி. அதை யடுத்து மீண்டும் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளை வைத்து பாகுபலி-2 படவேலைகள் கடந்த பல மாதங்களாக ஐதராபாத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டு வந்தது. தற்போது க்ளைமாக்ஸை நெருங்கி விட்டார் ராஜமவுலி. இதற்கடுத்து அனிமேஷன் வேலைகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாகுபலி-2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருவதால், எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்று கவனமாக செயல்படுகிறாராம் ராஜமவுலி. அதன்காரணமாக, அப்படத்திற்கு முதலில் ஒரேயொரு க்ளைமாக்ஸை மட்டுமே ரெடி பண்ணி வைத்திருந்தவர், இப்போது நான்கு விதமான க்ளைமாக்ஸ் காட்சிகளை ரெடி பண்ணி அதிலிருந்து இரண்டை தேர்வு செய்து அவற்றை படமாக்கி வருகிறாராம்.
அந்த இரண்டு க்ளைமாக்ஸையும் படமாக்கி, அதில் எது சிறப்பாக உள்ளதோ அதை படத்தில் இணைத்து வெளியிடப்போகிறாராம். ஒருவேளை படம் வெளியான பிறகு அந்த க்ளைமாக்ஸ்க்கு ரசிகர்கள்தரப்பில் இருந்து ஏதேனும் அதிருப்தி நிலவினால். கைவசம் இருக்கும் இன்னொரு க்ளைமாக்ஸை படத்தில் இணைக்கும் யோசனையும் உள்ளதாம். இப்படி இரண்டுவிதமான க்ளைமாக்ஸை எடுப்பதால் பாகுபலி-2 படத்தின் பட்ஜெட் கணிசமான அளவு உயர்ந்து விட்டதாம்.