ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படம் நேற்று வெளியானது. சுமார் 150 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் கவுண்டமணியின் காமெடிகள் தியேட்டரை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. இதில் கோலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கு கேரவன் வாடகைக்கு விடும் தொழில் நடத்துபவராக நடித்திருக்கிறார். இதில் அவர் சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர்களை நேரடியாகவே போட்டுத் தாக்குகிறார் அவற்றில் சில...
காட்சி-1
கவுண்டமணியின் உதவியாளர்: அண்ணே இந்த ஹன்சிகா மோத்வானி, காஜல் அவர்வாலுக்கு கேரவன் வேணுமாம்.
கவுண்டமணி: ஏண்டா ஜாதி பெயரை ஒழிக்கணும்னு போராடிக்கிட்டிருக்கோம். இவளுக என்னடா மோத்வானி, அகர்வால்னு ஜாதி பெயரை வச்சிருக்காளுங்க. ஜாதி பெயர் வச்சிருக்கிறவங்களுக்கு கேரவன் கிடையாதுன்னு சொல்லு. (பின்னர் காஜல் அகர்வாலும், ஹன்சிகா மோத்வானியும் கவுண்டமணி மீது வழக்கு தொடுக்கிறார்கள்)
காட்சி-2
உதவியாளர்: அண்ணே விஷாலுக்கு கேரவன் வேணுமாம்..
கவுண்டமணி: பின்னி மில்லுக்கு அனுப்பு... பைட் சீன் எடுப்பாங்க...
உதவியாளர்: அண்ணே கவுதம் மேனனுக்கு கேரவன் வேணுமாம்...
கவுண்டமனி: ஈசியார் காபி ஷாப்புக்கு அனுப்பு லவ் சீன் எடுப்பாங்க...
உதவியாளர்: ஹரிக்கு கேரவன் வேணுமாம்...
கவுண்டமனி: போலீஸ் ஸ்டேஷன்னு அனுப்பு...
உதவியாளர்: எப்படின்னே பேர் சொன்ன உடனேயே லொக்கேஷன் சொல்றீங்க...
கவுண்டமணி: எத்தனை வருஷமா பார்த்துக்கிட்டிருக்கோம்.
காட்சி-3
உதவியாளர்: அண்ணே ஜி.வி.பிரகாஷ், எஸ்.ஜே.சூர்யால்லாம் நடிக்க வந்துட்டாங்கண்ணே...
கவுண்டமணி: அடேய் இங்க என்னடா நடக்குது. சினிமா எங்கடா போய்கிட்டிருக்கு.
காட்சி-4
உதவியாளர்: அண்ணே பவர் ஸ்டாருக்கு 2 கேரவன் வேணுமாம்
கவுண்டமணி: அவன் ஒருத்தன் நடிக்கிறதுக்கு எதுக்குடா 2 கேரவன்
உதவியாளர்: அவர் ரெண்டு கேரக்டர்ல நடிக்கிறார்னே. கெட்அப்புக்கு ஒண்ணு வேணுமாம்.(கவுண்டமணி எதுவும் சொல்லத் தோணாம் சரக்கை எடுத்து மடக்கு மடக்கென்று குடிக்கிறார்)
காட்சி-5
படப்பிடிப்பு தளத்தில் ஒரு புதுமுகம் நடித்து கொண்டிருக்கிறார். கேமரா முன்னால் நின்று அவர் வசனம் பேசுகிறார்.
புதுமுகம்: நான் செத்துட்டேன்னா உன்னை சும்மா விடமாட்டேண்டா...
இந்த வசனத்தை அவர் சரியாக பேசாததால் இயக்குனர் பேசிக் காட்டுகிறார். திரும்ப திரும்ப பல டேக்குகள் போய் கடைசியில் ஓகே ஆகிறது. கவுண்டமணி அருகில் புதுமுக ஹீரோ உட்காருகிறார். கவுண்டனி அந்த வசனத்தை திரும்ப பேச சொல்கிறார். பின்னர் இயக்குனர் பக்கம் திரும்பி இந்த வசனத்தை எழுதினது யாரு? என்கிறார் இயக்குனர் நான்தான் எழுதினேன் என்கிறார்.
அப்போது கவுடண்மணி சொல்கிறார். "ஏண்டா நான் செத்துட்டேன்னா உன்னை சும்மா விடமாட்டேன்னு சொல்றானே செத்துட்டா அவ பொணமாகிடுவாண்டா அப்புறம் என்னத்தாடா அவன் புடுங்குவான்.
காட்சி-6
உதவியாளர் போனில் அதெல்லாம் கேரவன் அனுப்ப முடியாது என்று யாருக்கோ சொல்கிறார். அப்போது...
கவுண்டமணி: யாருக்குடா அனுப்ப மாட்டேங்குற?
உதவியாளர்: ஒரு படத்துல நாய் நடிக்குதாம். அதுக்கு கேரவன் கேட்குறாங்க.
கவுண்டமணி: டேய் இப்பல்லாம் நாய் நடிச்ச படமும், பேய் நடிச்ச படமும்தாண்டா ஓடுது. மனுஷன் நடிச்சா எங்கடா ஓடுது. நாய்க்கும் கேரவன் கொடு.
உதவியாளர்: அண்ணே ஒரு நடிகர் போன் பண்றாருண்ணே
கவுண்டமணி: அவனுக்கு இல்லேன்னு சொல்லு. மரத்தடியில மேக்அப் போட்டுக்கச் சொல்லு.
இதுபோன்று இன்னும் பல காட்சிகளில் நடிகர் நடிகைகளை நேரடியாகவே போட்டு பொளக்கிறார் கவுண்டர்.