ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை : குடிபோதையில் கார் ஓட்டி, போலீஸ் வண்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டார்.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். ‛முறைமாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார், ஆனால் அவரால் முன்னணி நடிகராக உயரமுடியவில்லை. ஹீரோவாக ஜெயிக்க முடியாதவர் அடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். அதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது வா டீல், குற்றம் 23 உள்ளிட்ட அவரது படங்கள் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில், நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. இதில் நடிகர் அருண் விஜய், தன் மனைவியுடன் கலந்து கொண்டார். வரவேற்பில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருக்கிறார். பின்னர் நள்ளிரவில் குடிபோதையிலேயே நிதானமின்றி காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸின் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார். இதில் போலீஸ் வாகனத்தின் பின்புறம் சேதம் அடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை பாண்டிபஜார் போலீசார், அருண் விஜய்யை கைது செய்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் விபத்து ஏற்படுத்தியது ஆகிய இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜாமினில் விடுதலை : சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அருண் விஜய்யின் தந்தையும், நடிகருமான விஜயகுமார், பாண்டிபஜார் போலீஸ்க்கு விரைந்தார். பின்னர், அருண் விஜய்யை, போலீசார் அவரது சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர். போலீஸ் வாகனத்தை அவர் சரி செய்து தருவதாக கூறப்படுகிறது.
பிரபலம் என்பதால் விடுதலையா? : சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் தான் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். ஆனால் இவர் போன்றோர் குடித்துவிட்டு அதிகவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டு சர்வசாதரணமாக வெளியே வந்து விடுகின்றனர். சாமானியர்கள் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்களையும் போலீசார் இதுபோன்று விடுவிப்பார்களா...? என்ற கேள்வி ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கின்றன.