ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருடங்களுக்கு முன் தமிழ்சினிமாவில் ஃபைட் மாஸ்டராக இருந்தவர் ஜாகுவார் தங்கம். ஒரு கட்டத்தில் இவருக்கு படங்கள் இல்லாமல் போனதால் கில்டு என்ற ஒரு அமைப்பில் நுழைந்து மெல்ல அதன் தலைமைப் பொறுப்பை கைப்பற்றினார். அதன் பிறகு சின்ன பட்ஜெட் படங்களின் விழாக்களுக்கு வர ஆரம்பித்தார். அப்படி வரும்போது ஏடாகூடமா எதையாவது பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அது சில மீடியாக்கள் செய்தியாக வெளியிட்டதால் ருசி கண்ட ஜாகுவார், தொடர்ந்து எல்லா விழாக்களிலும் இப்படி ஏடாகூடமாக பேச ஆரம்பித்தார். இதன் உச்சகட்டமாக நேற்று நடைபெற்ற ஒரு பட விழாவில், பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வழக்கம்போல ஆவேசமாக பேசினார்.
அதாவது, திருட்டு விசிடியை ஒழிக்க வந்த ஆபந்தபாந்தவனே நாம்தான் என்று நினைத்துக் கொண்டு, “திருட்டு விசிடி யாராவது பார்த்தீர்கள் என்றாலோ, விற்றீர்களோ என்றாலோ கைகள் உடைக்கப்படும், உங்கள் கடைகள் கொளுத்தப்படும்” என்று வன்முறையாக முழங்கினார்.
திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்களின் கைகளை உடைப்பேன் என்றும், கடைகளை கொளுத்துவேன் என்றும் பகிரங்கமாக வன்முறையாக வரம்புமீறி பேசும் ஜாகுவார் தங்கம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகிலேயே வலுக்க ஆரம்பித்துள்ளது.