ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டின் மிகத்திறமையான நடிகைகளில் ஸ்வரா பாஸ்கரும் ஒருவர். எப்படிப்பட்ட ரோலிலும் அருமையாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர். இவர், அடுத்தப்படியாக ஒரு படத்தில் செக்ஸ் தொழிலாளியாக நடிக்க உள்ளார். பிரபல எழுத்தாளரும், உதவி இயக்குநருமான ஆதித்யா கிருபலாணி தான் எழுதிய நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ‛‛திக்லி அண்ட் லக்ஷ்மி பாம்'' என்று பெயர் வைத்திருக்கிறார். இது அந்த நாவலின் பெயர் தான். இந்தப்படத்தில் தான் ஸ்வரா பாஸ்கர், செக்ஸ் தொழிலாளியாக நடிக்கிறார்.
இதுப்பற்றி ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது... ‛‛ஆதித்யா, இப்படம் பற்றி பேசுவதற்கு முன்னர் தான் எழுதிய புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார். நானும் புத்தகத்தை படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. கதையும் சரி, என்னுடைய ரோலும் சரி இதுவரை நான் நடித்திராத ஒன்று. செக்ஸ் தொழிலாளர்களின் இன்னல்களை பற்றி விரிவாக பேசப்போகும் படமாக இது இருக்கும். இப்படத்தில் நடிக்கவும், பின்னர் அதை திரையில் காணவும் ஆவலாய் இருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது'' என்று கூறினார்.