ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தியாகராஜ பாகவதர் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமான படம் வால்மீகி. கொள்ளைக்காரனாக இருந்து பின்னர் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் கதை. பாகவதருக்கு ஜோடியாக யு.ஆர்.ஜீவரத்தினம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர்கள் தவிர டி.எஸ்.பாலைய்யா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரும் நடிப்பதாக இருந்தது ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்தது.
பாகவதர் நடிப்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் ஜீவரத்தினமும் ஜோடியாக நடித்தால் படத்தில் சங்கீத மழை பொழியும் என்பதால் ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் இந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைக்கு சென்று விட்டதால் படத்தை தயாரித்த ஜூபிடர் நிறுவனம் பாகவதருக்கு பதிலாக ஹென்னப்ப பாகவதரை நடிக்க வைத்தது. ஹென்னப்ப பாகவதர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர், கன்னடத்தில் பிரபலமான நடிகர்.
தியாகராஜ பாகவதரின் கானங்களை கேட்க ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு ஹென்னப்ப பாகவதரின் பாடல்கள் பிடிக்காமல் போகவே பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட வால்மீகி தோல்வி அடைந்தது.