ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மேடை பேச்சாளர் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார் பார்த்திபன். அவர் இயக்கும் படங்கள் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக இருக்கும்.
இதனிடையே பார்த்திபனின் கலைச் சேவையை பாராட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வரும் ரோஸ்டன் அக்ரிட்டேஷன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு, மாறுபட்ட இயக்குனர் என்ற விருதை வழங்கி உள்ளது. இதனை அந்த அமைப்பின் இயக்குனர் பார்த்திபனிடம் வழங்கினார்.
தங்கமுலாம் பூசப்பட்ட தகட்டில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுக்கான காரணத்தை விளக்கமா எழுதியும் கொடுத்துள்ளனர். கமலஹசானுக்கு செவாலியே விருது கிடைத்தது குறித்து சிலாகித்து பாராட்டிவிட்டு தனக்கு கிடைத்த விருதை "ஏழைக்கு கிடைத்த எள்ளுருண்டை" என்று தனக்கே உரிய பாணியில் வர்ணித்துள்ளார் பார்த்திபன்.