ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் குற்றமே தண்டனை படத்தில் நடித்து விட்டார் விதார்த். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா திவாரியா, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித் துள்ளனர். க்ரைம் திரில்லர் கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை அடுத்து தனது புதிய படத்தில் நடிப்பதற்கும் தயாராகி விட்டார் விதார்த்.
ஆனால், அந்த படத்தில் நடிக்கவிருக்கும் அருந்ததி நாயர் தற்போது சைத்தான், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அவருக்காக வெயிட்டிங்கில் இருக்கிறாராம் விதார்த். சைத்தானில் சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ள அருந்ததி நாயர், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் அதர்வாவின் காதலியாக நடிக்கிறார். இதேபடத்தில் ரெஜினா, பிரணிதா ஆகியோரும் நடித்தபோதும், அருந்ததி நாயருக்கே முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் அந்த படத்திற்கு அதிக நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்து வருகிறாராம் அருந்ததி நாயர்.
இதற்கிடையே சைத்தான் படத்திலும் அருந்ததி நாயர் தற்போது நடித்துக்கொண்டிருப்பதால், இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறதாம். அதனால் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் 20-ந்தேதி தொடங்குகிறார் விதார்த்.