ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அலி அபாஸ் ஜாபரும், சல்மான்கானும் மீண்டும் இணைய இருக்கிறார்கள் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அவர்கள் இணையும் படம் ‛ஏக்தா டைகர்' படத்தின் இரண்டாம் பாகம் என்றும், படத்திற்கு டைகர் ஜிந்த ஹே என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுப்பற்றி இயக்குநர் அலி அபாஸிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛இன்னும் உறுதியாகவில்லை, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உறுதியானதும் அறிவிப்பு வெளியாகும். தற்போது நான், சுல்தான் படத்தின் கொண்டாட்டத்தை விடுமுறையாக கழித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
‛ஏக்தா டைகர்' படம் 2012-ம் ஆண்டு சல்மான், கத்ரீனா நடிப்பில் கபீர்கான் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.