ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எந்த ஒரு துறையிலும் திறமைதான் முக்கியம், திறமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். திரையுலகத்திற்கு அது ரொம்பவே முக்கியம். நடிகர் ஜீவாவிற்கு அப்பா பிரபலமான தயாரிப்பாளர் என்பதால் அப்பாவின் தயாரிப்பிலேயே நாயகனாக அறிமுகமானார். இருந்தாலும் அவருடைய முதலிரண்டு படங்களும் எந்த ஒரு கணக்கிலும் சேராமல் போனது. அவருடைய திறமையை ஓரளவிற்கு வெளிப்படுத்திய படம் 'ராம்'. அமீர் இயக்கிய அந்தப் படம் ஜீவாவுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
கடந்த 13 வருடங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் ஜீவா நடித்திருந்தாலும் அவர் பெயர் சொல்லும் படங்களாக சில படங்களே அமைந்தன. ''டிஷ்யும், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன்,” ஆகிய படங்கள்தான் அவரை நினைத்துப் பார்க்க வைக்கும் படங்களாக அமைந்தன. பெயரும், வெற்றியும் அந்தப் படங்களின் போது கிடைத்தாலும் அதைத் தொடர்ந்து தக்க வைக்கத் தவறிவிட்டார் ஜீவா. கடைசியாக அவர் நடித்து வெளிவந்த 'யான், போக்கிரி ராஜா' படங்கள் அவரை அதிகமாகவே கீழே தள்ளிவிட்டன. இருந்தாலும் அந்தத் தோல்விகளிலிருந்து மீண்டு அடுத்தடுத்து மேலே எழ முயற்சி செய்து வருகிறார்.
அதில் அடுத்த படமாக ஆகஸ்ட் 5ம் தேதி 'திருநாள்' படம் வெளியாக உள்ளது. படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருப்பது கூடுதல் பலம். கிராமத்துக் கதை என்பதும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் படமாக இந்தப் படம் அமையும். படம் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆனாலும், படத்தை வெளியிடாமல் நல்ல இடைவெளிக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் திருநாள் ஆகஸ்ட் 5ம் தேதியாக அமைந்துள்ளது. இந்தத் 'திருநாள்' தரும் திருப்பம்தான் ஜீவாவை இனி 'கவலை வேண்டாம்' என இருக்கச் செய்யும்.