ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மாயவரத்து பொண்ணு ப்ரியா ஆனந்த். 'வாமணன்' படத்தில் அறிமுகமான ப்ரியா, அதன் பிறகு 'புகைப்படம்', 'குளிர் 180', 'எதிர் நீச்சல்', 'வணக்கம் சென்னை' படங்களில் நடித்தார். இடையில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' உள்பட சில இந்திப் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
இவர் நடித்த 'அரிமா நம்பி', 'இரும்பு குதிரை', 'வை ராஜா வை' படங்கள் ஹிட்டானாலும் அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் 'முத்துராமலிங்கம்', 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படங்களில் நடித்து வருதுகிறார்.
இந்த நிலையில் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அறிமுகமாகிறார். 'எஸ்ரா' என்ற மலையாள திகில் படத்தில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார். கன்னடத்தில் புனித்ராஜ்குமாருடன் 'ராஜ்குமாரா' என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி ப்ரியா ஆனந்த் கூறியதாவது:
மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் அறிமுகமாவது சந்தோஷமாக இருக்றிது. அதுவும் இரு மொழியின் முக்கியமான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறேன். தமிழில் நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. ஆனால் நடிக்க வாய்ப்பில்லாத ஹீரோயின் என்கிற பெயரில் ஹீரோ பின்னால் சுற்றுகிற கேரக்டர்களாகவே இருக்கிறது. அதனால்தான் தேர்வு செய்து நடிக்கிறேன். என்றார்.