ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். அடுத்தடுத்து பல பெரிய படங்களை தயாரித்து வந்தவர், திடீரென இரண்டு மாதங்களுக்கு முன்னர் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதேசமயம் மதன் மீது பணமோசடி தொடர்பாக நிறைய புகார்களும் எழுந்தன.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மதனை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தவழக்கில் சில வாரங்கள் கால அவகாசம் கேட்டிருந்தது போலீஸ். அந்த அவகாசம் முடிந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதியிடம் போலீஸ் தரப்பில், மதனை வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவர் உயிரோடு தான் இருக்கிறார். கிட்டத்தட்ட அவரை நெருங்கிவிட்டோம். மேலும் ஒருமாதம் அவகாசம் வேண்டும் என்று கூறினர். இதையடுத்து நீதிபதியும், 4 வாரம் காலஅவகாசம் வழங்கினார். அதோடு, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், இனியும் கால அவகாசம் கேட்க கூடாது என்று அறிவுறுத்தினார். இதையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.