ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கரின் ஐ படத்திற்கு பிறகு தங்கமகன், கெத்து, தெறி என வரிசையாக நடித்த எமிஜாக்சனுக்கு எந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்சய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ஆளி என்ற இந்தி படத்தில் நடிக்கும் எமிஜாக்சன், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா நடித்துள்ள தேவி படத்தில் நட்புக்காக நடித்திருக்கிறார். ஆனால் இதையடுத்து தமிழில் அவருக்கு எதிர்பார்த்தபடி புதிய படங்கள் புக்காகவில்லை.
அதனால் தற்போது ஆளி இந்தி படத்தில் நடித்து வரும் எமிஜாக்சன், இந்தியில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம். ஏற்கனவே இந்தியில் ஏக் திவானா தா, சிங் இஸ் பிலிங் போன்ற படங்களில் நடித்திருப்பதால் பாலிவுட்டில் எமிக்கென்று ஒரு ரசிகர் வட்டாரம் உள்ளதாம். மேலும், ரஜினி-அக்சய்குமாருடன் நடித்து வரும் 2.ஓ படம் இந்தியிலும் வெளியாகயிருப்பதால், இந்த சமயத்தில் பாலிவுட்டில் முயற்சி எடுத்தால் பெரிய அளவிலான படங்கள் கிடைக்கும் என்று லண்டனில் இருந்து அடிக்கடி மும்பைக்கு சென்று அங்குள்ள முன்னணி டைரக்டர்களுடன் படவேட்டை நடத்தி வருகிறாராம் எமிஜாக்சன்.