ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் 'சபாஷ் நாயுடு'. இந்தப் படத்தின் ஆரம்ப விழா, நடிகர் சங்க மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாகி நடைபெற ஆரம்பித்தது. அங்கு படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே முதலில் இந்தப் படத்திற்கு இயக்குனராக நியமிக்கப்பட்ட ராஜீவ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே, கமல்ஹாசனே படத்தை இயக்க ஆரம்பித்தார்.
அங்கு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததும் படக் குழுவினர் சென்னை திரும்பினர். அடுத்த சில நாட்களிலேயே கமல்ஹாசன் அலுவலக மாடியிலிருந்து கீழே விழுந்தார். அவருடை காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்த பின்னும் இன்னும் ஓய்வில் இருந்து வருகிறார். இதனிடையே, தற்போது படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெய கிருஷ்ணா கும்மாடி, படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் ஜோசப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று மொழிகளில் இப்படம் தயாரிக்கப்படுவதால் அவர்களிருவராலும் கமல்ஹாசனின் வேகத்திற்குப் பணிபுரிய முடியவில்லை என்று சொல்கிறார்கள்.
அதோடு, தமிழ், தெலுங்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் படப்பிடிப்பில் காட்டிய 'பந்தா'வும் கமலுக்குப் பிடிக்கவில்லையாம். அதனால், அவரும் படத்திலிருந்து நீக்கப்படலாம் என்கிறார்கள்.
எந்த நேரத்தில் 'சபாஷ் நாயுடு' படத்தை ஆரம்பித்தார்களோ தெரியவில்லை, அடுத்தடுத்து தடங்கலாக வருகிறது என கோலிவுட்டிலேயே கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.