ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினி நடித்த 'கபாலி' மாபெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கபாலி படத்திற்கு ஊடகங்களின் விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தன. கபாலி படம் பற்றிய ரசிகர்களின் கருத்து எப்படி இருந்தால் என்ன?, 'தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வசூலில் எப்போதும் நான் தான் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். ஆமாம், கபாலி படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் கபாலி படத்தின் கிளைமாக்ஸ், இரண்டாம் பாகத்துக்கான தொடர்ச்சியைப் போல் அமைந்திருப்பதால் கபாலி-2 உருவாகும் என இருதினங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதுப்பற்றி தாணு அளித்துள்ள பேட்டியில் விடையளித்திருக்கிறார்.
அதில் தாணு கூறியிருப்பதாவது... ‛‛கபாலி-2 படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம். ஆனால் அது ரஜினி சாரின் கையில் தான் இருக்கிறது. அவர் சரி என்றால் நான் தயாரிப்பாளராக தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.