ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்தவர் திரிஷா. அதன்பிறகு மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியான அவர் சில படங்களிலேயே விஜய், அஜீத் என நடித்து முன்னணி ஹீரோயினி பட்டியலில் இடம்பிடித்து விட்டார். பத்தாண்டுகளுக்கு மேலாகவும் பிசியாக நடித்து வரும் அவர், தற்போது கதையின் நாயகியாகவும் அடுத்த வெலுக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில், சித்தார்த்தின் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்களில் தோழியாக நடித்த ஐஸ்வர்யாமேனனும் இப்போது கழுகு கிருஷ்ணா நடிக்கும் வீரா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு, புதிய படங்களில் நடிக்கவும் தீவிர முயற்சி எடுத்து வரும் அவர், தன்னைப்பற்றி மீடியாக்களில் வெளியாகும் செய்திகளோடு தனது ஆரம்ப கால போட்டோக்கள் வெளியாகி வருவதால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காரணம், ஆரம்பத்தில் இருந்ததை விடவும் இப்போது அவர் தனது உடல் அழகை மேருகேற்றியிருக்கிறாராம். அதனால் இந்த நேரத்தில் பழைய போட் டோக்களைப்பார்த்து தனக்கு வரவேண்டிய படங்கள் திரும்பிச்சென்று விடும் என்பதால் அதிர்ச்சியடைந்துள்ளார் ஐஸ்வர்யாமேனன். இதனால், தனக்கு தெரிந்த மீடியா நண்பர்களை தொடர்பு கொண்டு, தற்போது தான் எடுத்துள்ள புதிய போட்டோக்களை அனுப்பி வைத்து, இனிமேல் இந்த போட்டோக்களை மட்டுமே யூஸ் பண்ணுங்கள் என்ற அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறார் ஐஸ்வர்யாமேனன்.