சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
பிரதாப் போத்தன் இயக்கத்தில் சிவாஜிகணேசன், மோகன்லால், ரஞ்சிதா மற்றும் பலர் நடிக்க பிரியதர்ஷன் கதையில், இளையராஜா இசையமைப்பில், பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஒரு யாத்ரா மொழி'. படம் முடிவடைந்து ஒரு வருடம் கழித்து வெளிவந்த பின்னும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். சிவாஜிகணேசன், மோகன்லால் ஆகியோர் நடித்த படங்களின் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படமாக அமைந்த ஒரு படம். நடிகராக இருந்து 'மீண்டும் ஒரு காதல் கதை' தமிழ்ப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் 'ருது பேதம், டெய்ஸி' உள்ளிட்ட மலையாளப் படங்களை இயக்கியவர். கமல்ஹாசன், பிரபு நடித்த 'வெற்றி விழா', பிரபு, குஷ்பு நடித்த 'மைடியர் மார்த்தாண்டன்', நெப்போலியன் நடித்த 'சீவலப்பேரி பாண்டி' ஆகிய படங்கள் அவரது இயக்கத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மலையாளப் படங்கள்.
'ஒரு யாத்ரா மொழி' படம்தான் அவர் கடைசியாக இயக்கி வெளிவந்த படம். கடந்த 19 வருடங்களாக அவர் திரைப்படங்களை இயக்குவதையே நிறுத்திவிட்டார். மாதவன், துல்கர் சல்மான ஆகியோர் நடிக்க அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்தன. இருந்தாலும் 19 வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய 'ஒரு யாத்ரா மொழி' படத்தை தற்போது 'பயணத்தின் மொழி' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் தமிழ் வியாபாரியாக நடித்ததால், அவருடைய குரலைத் தவிர்த்து மற்றவர்களின் குரலை தமிழில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். ஒரு மொழியில் வெளியான படத்தை வேறொரு மொழியில் இத்தனை வருடங்கள் கழித்து டப் செய்து வெளியிடுவது இதுவே முதல் முறை.