ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெக்கானிக்கல் என்ஜீனீயராக இருந்து இயக்குனராகியிருக்கிறார் கார்த்திக் நரேன் என்ற 21 வயது இளைஞர். 'விழியின் சுவடுகள்', 'நிறங்கள் மூன்று', 'ஊமைக்குரல்', 'பிரதி' என நான்கு குறும்படங்கள் இயக்கி விட்டு 'துருவங்கள் பதினாரு' என்ற படத்தை இயக்கி உள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிசாய் இசையமைத்துள்ளார். 16 மணி நேரத்தில் நடக்கும் கதையில் 16 விதமான கேரக்டர்கள் இடம்பெறுகிறது. இந்த கேரக்டர்களை இணைக்கும் மைய கேரக்டராக ரகுமான் நடித்துள்ளார். இதுபற்றி கார்த்திக் நரேன் கூறியதாவது:
இந்தப்படத்தில் 16 பேர் பாத்திரங்களாக வருகிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக உணர வைப்பார்கள். அது மட்டுமல்ல படத்தின் கதை 16 மணி நேரத்தில் நடக்கிறது. எனவேதான் இப்பெயரை வைத்தோம். ரகுமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். அவர் தன் பணியில் நடந்த ஒரு சம்பவத்தால் ஊனமுற்றவராகி விடுகிறார். அதனால் பணியைவிட்டுப் போய் விடுகிறார் .ஐந்தாண்டுகள் ஓடி விடுகின்றன. அதற்குப் பிறகு ஒரு பொறி தட்டுகிறது. அன்று, தான் செய்த புலனாய்வு விசாரணையை மறுபடியும் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றவே காட்சிகள் விரிகின்றன. அவைதான் 16 மணி நேரம் நடப்பவை. காதல் காட்சிகளோ, பாடல்களோ கிடையாது. திரைக்கதைக்கு தேவையில்லாத எந்த அம்சமும் படத்தில் கிடையாது. கதை களம் கோவை. 23 நாளில் படத்தை எடுத்து முடித்துவிட்டோம் என்கிறார் இயக்குநர் கார்த்திக்.