வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எனும் பதவியிலும் இருக்கிறார். நடிகர், தயாரிப்பாளராக, சங்க நிர்வாகி... ஆகியவற்றோடு தன்னை பல தளங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார் விஷால். குறிப்பாக கல்வி உதவி, நலத்திட்ட உதவிகள் செய்கிறார். கூடவே சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கரும்பு விவசாயிகளின் துயரத்தில் பங்கு கொண்டு விவசாயிகளுக்கு உதவி செய்தார்.
இந்நிலையில் விஷாலின் இந்த சேவையை பாராட்டி, தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும், விவசாயிகளும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஷாலும் பங்கேற்பதாக இருந்தது.
ஹோட்டலில் சரியாக மாலை 4 மணிக்கு விவசாயிகள் கூட்டம் தொடங்கியது. ஆனால் விஷால் 5 மணி வரை வரவேயில்லை. இதையடுத்து விஷாலின் போட்டோவை முன்னிறுத்தி வைத்துவிட்டு விவசாயிகள் தங்களின் கூட்டத்தை தொடர்ந்தனர்.