ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புரியாத புதிர் படத்தில் இயக்குனரானவர் கே.எஸ்.ரவிக்குமார். அதையடுத்து ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், தற்போது கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். மேலும், முன்பெல்லாம் முழுநேர இயக்குனராக இருந்த அவர், தனுஷின் தங்கமகன் படத்தில் அப்பா வேடத்தில் நடித்தார். அதையடுத்து சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜயசேதுபதியின் றெக்க போன்ற படங்களிலும் அப்பா வேடங்களில் நடித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஆக, சமீபகாலமாக கே.எஸ்.ரவிக்குமாரின் கவனம் நடிப்பு பக்கம் திரும்பியிருக்கிறது. அதனால் அவர் இனிமேல் படிப்படியாக முழுநேர நடிகராகி விடுவார் என்றுதான் கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், கே.எஸ்.ரவிக்குமாரோ, நான் இப்போதும் டைரக்டர்தான். அந்த நாற்காலியில் தான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். நடிக்க சில வாய்ப்புகள் கிடைத்ததால் நடித்தேன். அதோடு இப்போதைக்கு இயக்குனர் நாற்காலியில் இருந்து இறங்கும் ஐடியாவும் எனக்கு இல்லை. என்னைப்பொறுத்தவரை நடிப்பு என்பது ஒரு பகுதிநேர வேலை தான். இயக்கத்தில்தான் எனது அதிகப்படியான கவனமும் இருக்கும் என்கிறார் அவர்.