மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
ராதிகா தயாரித்து நடிக்கும் 'வாணி ராணி' 1000 எபிசோட்களை கடந்துள்ளது. தயாரித்து ஒளிபரப்பும் 'தாமரை' தொடர் 500 எபிசோட்களை கடந்துள்ளது. இதனை தனது அலுவலக ஊழியர்கள் மற்றும் கலைஞர்களுடன் கொண்டாடினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் சின்னத்திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. சின்னத்திரையில் நிறைய கத்துக்கிட்டேன். கத்துக்கிட்டதுல முக்கியமானது உழைப்பு. இங்கு உழைச்சிக்கிட்டே இருந்தா தான் ஜெயிச்சிக்கிட்டே இருக்க முடியும். கொஞ்சம் அசந்தாகூட ஓரமா உட்கார வச்சிடுவாங்க. இத்தனை வருடம் நான் நிலைச்சு நிற்கிறேன்னா அதுக்கு உழைப்பைத் தவிர வேற காரணம் எதுவுமில்லை.
இப்போது சின்னத்திரை சீரியல்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. சங்கத்தின் மூலமா அதை தீர்க்க சம்பந்தப்பட்டவங்க முயற்சி எடுக்கணும். என் கணவர் நடிகர் சங்கத்துக்கு நிறைய உழைச்சார். கடைசியில அவருக்கு கிடைத்தது வேதனையும், மன உளைச்சலும் தான் அப்படி ஒரு நிலமை எனக்கு வேண்டாம் என்று தான் சங்கத்துலேருந்து ஒதுங்கிட்டேன். அதோட எனக்கு நிறைய வேலை இருக்கு. அதை பார்த்தால் போதும்னு இருக்கேன். இப்போது என் மகள் திருமணத்துல பிசியாக இருக்கேன் என்கிறார் ராதிகா.