மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் சினிமாவில் முன்னணி விநியோக நிறுவனமாக விளங்குகிறது ஆரா சினிமாஸ். இந்த நிறுவனம் தற்போது விக்ரம் நயன்தாரா நடிக்கும் 'இருமுகன்', விஜய் ஆண்டனி நடித்து வரும் 'சைத்தான்', பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகும் 'தேவி', நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் கிருஷ்ணா நடிக்கும் 'பண்டிகை' படங்களை வாங்கி உள்ளது. ஒரே நேரத்தில் 4 படங்களை வாங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ஆரா சினிமாஸ்.
இதுகுறித்து அதன் உரிமையாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறியதாவது: ஒரு விநியோகஸ்தராக எங்களின் ஆரா சினிமாஸ் சில ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறது. அந்த ஏற்ற இறக்கங்களை எங்களின் வளர்ச்சி பாதைக்கு வித்தாக அமைகின்ற உரமாக தான் நாங்கள் கருதுகிறோம். சிறிய நட்சத்திர கூட்டணியோடும், வலுவான கதையம்சத்தோடும் தான் நாங்கள் ஆரம்ப காலத்தில் விநியோக துறையில் அடியெடுத்து வைத்தோம். ஆனால் தற்போது நாங்கள் மிக பெரிய நட்சத்திர கூட்டணியோடு களம் இறங்கி இருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
எங்களின் திறமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ள தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் ஆரா சினிமாஸின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். வர்த்தக ரீதியாக ஒரு படத்தை வெற்றி செய்வதற்கு பல நுணுக்கங்கள் இருந்தாலும், நான் சினிமா மீது வைத்திருக்கும் பற்றும், காதலும் தான் அந்த வெற்றிக்கு முக்கிய தூணாக செயல்படும். தலைச்சிறந்த நட்சத்திர கூட்டணி, வலுவான கதை அம்சம், பிரம்மாண்டமான விளம்பரம் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணி வேர் என்கிறார் மகேஷ் கோவிந்தராஜ்.