ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் அதிலும் ஒரு வித்தியாசமாக அவர் நடித்த 'தங்க மகன்' படம் மற்ற ஊர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையில் மட்டும் 247 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த அளவிற்கு மதுரை மக்களை 'தங்க மகன்' கவர்ந்தான்.
1983 நவம்பர் 4ந் தேதி வெளியான இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பூர்ணிமா ஜெயராம், ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். ரஜினிக்காகவே உருவாக்கப்பட்ட பழிவாங்கும் ஆக்ஷன் கதை. இதில் ரஜினி 'பெஷவாடா பீமாரெட்டி' என்ற இன்னொரு தெலுங்கு மைனர் கெட்அப்பில் நடித்திருந்தார். அந்த வேடம் மதுரை ஜனங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அதோடு படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். “பூ மாலை ஒரு பாவையானது...”, “மச்சான பாருடி மச்சமுள்ள ஆளுடி...”, “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ....” “அடுக்குமல்லி இது ஆள் பிடிக்குது...” போன்ற இனிமையான பாடல்களை இப்போது கேட்டாலும் காதில் தேன்பாயும். 'நுவ்வா நேனு' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் பிரமாண்ட வெற்றி பெற்றது. சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பனும், தியாகராஜனும் இணைந்து தயாரித்திருந்தனர்.