ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் ஸ்டார் நடிகர்களே தங்களுக்கான கேரக்டரின் தன்மை பொறுத்து அது நெகட்டீவ் ரோலாக இருந்தாலும் கூட நடிக்க தயாராகிவிட்டனர். உதாரணமாக கோலிவுட்டில் அஜித், மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்தார். பாலிவுட்டில் கூட அக்ஷ்ய் குமார் தற்போது ரஜினியின் 2.O-வில் வில்லனாக நடித்து வருகிறார். அமீர்கான், ஷாரூக்கான் போன்றோர்கள் கூட நெகட்டீவ் ரோலில் நடித்துவிட்டனர். நடிகர் சல்மான்கானோ தனக்கு நெகட்டீவ் ரோலே வேண்டாம் என்கிறார்.
சல்மாமான்கான், தற்போது தான் நடித்துள்ள சுல்தான் படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛எனக்கு வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை, ரசிகர்களை முழுக்க முழுக்க எண்டர்டெயின்ட்மென்ட் செய்தாலே போதும். எப்பவும் போல ஹீரோவாகவும், நல்ல மனிதனாக இருக்கும் வேடங்களிலேயே நடிக்க விரும்புகிறேன். படம் முடிந்து ரசிகர்கள் வீடு திரும்பினால் கூட என்னுடைய ரோல் அவர்களுக்கு ஞாபம் இருக்க வேண்டும், அந்தமாதிரி ரோல்களிலேயே பெரிதும் நடிக்க விரும்புகிறேன். நிஜ வாழ்க்கையில் இல்லாவிட்டால் கூட திரையிலாவது நான் அதுபோன்று இருக்க விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.