ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமுத்திரகனி இயக்கிய உன்னை சரணடைந்தேன் படத்தில் நாயகனாக அறிமுகமானவர்தான் டைரக்டர் வெங்கட்பிரபு. அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததை அடுத்து சென்னை-28 படத்தில் இயக்குனராகி விட்டார் வெங்கட்பிரபு. அந்த விளையாட்டு கதையை அவர் விளையாட்டாக இயக்கியபோதும் அந்த படம் மெகா ஹிட்டானது. அதனால் அடுத்தபடியாக சில படங்களை இயக்கிய அவர், அஜீத்தின் மங்காத்தா படத்தை இயக்கி முன்னணி இயக்குன ரானார். இருப்பினும் அதன்பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சறுக்கி விட் டன. அதனால் அவர் எதிர்பார்த்த சில பெரிய ஹீரோக்கள் கால்சீட் தர முன் வரவில்லை.
விளைவு, தனது முதல் படமான சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினார் வெங்கட்பிரபு. முதல் பகுதியில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், சென்னை -28 படத்தை சென்னை கதைக்களத்தில் இயக்கிய வெங்கட்பிரபு, இரண்டாம் பாகத்தை தேனி கதைக் களத்தில் இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி விட்ட நிலையில், இன்னும் சில பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.