ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள சுல்தான் படம் தொடர்பாக பேட்டியளித்த போது இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் போது ‛தான் ஒரு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போன்று உணர்ந்ததாகவும், தன்னால் நிற்ககூட முடியவில்லை'' என்றும் கூறினார்.
சல்மானின் இந்த பேச்சிற்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மேலும் தேசிய மகளிர் ஆணையம் சல்மானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சில ஊர்களில் சல்மான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக சல்மான்கான், தன் வக்கீல் மூலம் தேசிய மகளிர் ஆணையத்திற்கு பதிலளித்திருக்கிறார். அதில் சல்மான்கான் இந்த பிரச்னைக்கு விளக்கம் மட்டுமே அளித்துள்ளதாகவும், மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சல்மான் கான் பதில் தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக மகளிர் ஆணையம் பதிலளிக்கும் என தெரிகிறது.