Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம் படத்துக்கு தடை கேட்டு வழக்கு: இயக்குனர் ராம்பாலா கோர்ட்டில் ஆஜர்

29 ஜூன், 2016 - 14:13 IST
எழுத்தின் அளவு:
Santhanam-movie-under-trouble-:-director-appear-in-court

காமெடி நடிகர் சந்தானம் தற்போது நடித்து முடித்துள்ள படம் 'தில்லுக்கு துட்டு', விரைவில் வெளிவர இருக்கிறது. இதனை ராம்பாலா என்பவர் இயக்கி உள்ளார். இந்த நிலையில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையார் முகமது மஸ்தான் சர்புதீன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அவர் தாக்கல் செய்த மனுவில் “இயக்குனர் ராம்பாலா எங்கள் தயாரிப்பில் 'ஆவி பறக்க ஒரு கதை' என்ற தலைப்பில் படம் இயக்குவதாக ஒப்புக் கொண்டார். அதற்கு 20 லட்சம் சம்பளம் பேசி 3 லட்சம் முன்பணமாக பெற்றார். நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் முன்பணம் கொடுக்கப்பட்டது. இதுவரை அந்தப் படத்துக்காக 80 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். எங்கள் படத்திலிருந்து விலகிக் கொண்ட ராம்பாலா, இப்போது அதே கதையைத்தான் 'தில்லுக்கு துட்டு' என்ற பெயரில் சந்தானத்தை வைத்து எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது சந்தானம் என்னை மிரட்டினர். எனக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க படம் வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.


வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். இயக்குனர் ராம்பாலா மற்றும் சந்தானம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரரணைக்கு வந்தது. இயக்குனர் ராம்பாலா ஆஜர் ஆனார். சந்தானம் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜர் ஆனார். இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை ஜூலை 6ந் தேதிக்கு தள்ளி வைத்தது. இருதரப்பும் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் அதன் அடிப்படையில் இடைக்கால மனுமீது தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனால் 'தில்லுக்கு துட்டு' படம் திட்டமிட்டபடி வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in