மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'பொல்லாதவன், ஆடுகளம்', ஆகிய படங்களுக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் மீண்டும் இணைந்துள்ள 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமானது. இப்படத்தின் நாயகியாக சமந்தா நடிப்பார் என எப்போதோ தனுஷ் அறிவித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது. இதனிடையே, சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தெலுங்குத் திரையுலகிலும், இங்கும் அவர்களது காதல் பற்றி நிறையவே செய்திகள் வெளியாகி வருகின்றன.
சமந்தா தற்போது புதிதாக எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்காமலே இருக்கிறார். அவர் தற்போது தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'ஜன்தா காரேஜ்' என்ற ஒரே படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நாகசைதன்யா குடும்பத்தினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. நாகசைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா, அமலாவைத் திருமணம் செய்து கொண்ட பின் அமலாவும் நடிப்பதை விட்டுவிட்டார்.
நாகசைதன்யாவின் வேண்டுகோளுக்கிணங்க சமந்தாவும் நடிப்பதை விட முடிவு செய்துள்ளார் என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக அவர் 'வட சென்னை' படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 'வட சென்னை' படத்தை 3 பாகங்களாக உருவாக்க வெற்றி மாறனும், தனுஷும் முடிவு செய்துள்ளார்கள். முதல் பாகத்தில் மட்டும் நடித்துவிட்டு சமந்தா விலகினால் நன்றாக இருக்காது. அதனால், இப்போதே அவர் விலகல் முடிவை தனுஷிடம் தெரிவித்துவிட்டதாகவும், அதற்கு தனுஷும் சம்மதம் சொல்லிவிட்டார் என்றும் தெரிகிறது.
அதனால்தான், தனுஷ் சில நாட்களுக்கு முன்பு 'வட சென்னை' நடிகர்கள் பற்றி விரைவில் அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.