ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகர் நடிகைகள் சினிமாவில் நடித்துக்கொண்டே கடை திறப்பு விழாக்கள், விளம்பர படங்களில் நடித்து பல வழிகளிலும் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில், சமந்தா கடை திறப்பு விழாக்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்ற சமந்தாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரை பெரும் அவஸ்தைக்கு பிறகே ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீட்டார்கள் போலீசார்.
அதேபோல் நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற வீகேர் 32-வது கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் சமந்தா. அவரது வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனபோதும் சமந்தாவை காண துடித்த ரசிகர்கள் கூட்டம் மேடையை நோக்கி முன்னேறியது.
இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, விழா மேடை சரிந்ததோடு, ஒலி பெருக்கி கருவிகளும் கீழே விழுந்து விட்டதாம். அதோடு சமந்தாவின் சொகுசு கார் டயரை யாரோ விசமிகள் குத்தி கிழித்து பஞ்சராக்கி விட்டார்களாம். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததோடு, சமந்தாவை பாதுகாப்பாக உள்ளே அனுப்பி பின்னர் வேறு காரில் அவரை தங்கும் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.