ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'டைம் மிஷின்' படம் என்றாலே அந்த மாதிரியான படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்க்க முடியும். அவர்கள்தான் அதற்கான விஷயங்களைச் செய்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், தமிழ்த் திரையுலகத்திலும் அம்மாதிரியான படங்களைக் கொடுக்க முடியும் என்று இரண்டு படங்கள் நிரூபித்தன. கடந்த வருடம் இதே நாளில் வெளிவந்த 'நேற்று இன்று நாளை', 50 நாட்களுக்கு முன்பு வெளிவந்த '24' ஆகிய படங்கள் டைம் மிஷின் கதையை மையமாகக் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்த படங்களாக அமைந்தன.
'இன்று நேற்று நாளை' படத்தை குறைந்த பட்ஜெட்டில் அறிவியில் சமாச்சாரங்கள், கிராஃபிக்ஸ் அது, இது என அதிக செலவில்லாமல் கதையை மட்டுமே மையமாக வைத்து, கற்பனை செய்து பார்க்க முடியாத திரைக்கதையை வைத்து ஒரு அருமையான படத்தை தன்னுடைய அறிமுகப்படுத்திலேயே கொடுத்திருந்தார் இயக்குனர் ரவிகுமார். அந்தப் படத்திற்கு மட்டும் இன்னும் அதிக பட்ஜெட் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பலரும் படத்தைப் பற்றி கருத்து சொன்னார்கள்.
அதே டைம் மிஷினை வைத்து சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிக்க 50 நாட்களுக்கு முன்பு வெளிவந்த '24' படம் ஸ்டார் வேல்யூ, பிரம்மாண்டம் ஆகியவை இருந்தும் கதை என அழுத்தமாக எதுவும் இல்லாததால் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனது. இந்தப் படத்திற்கு செலவு செய்த தொகையை 'இன்று நேற்று நாளை' இயக்குனரிடம் கொடுத்திருந்தால் சூப்பரான ஒரு படத்தைக் கொடுத்திருப்பாரோ என்னமோ...?.
'இன்று நேற்று நாளை' படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. '24' படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்களாகிறது. வெற்றியோ, தோல்வியோ இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அனைவரையும் பேச வைத்த படங்களாக இருந்தது தமிழ் சினிமாவிற்குப் பெருமைதான்.