சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடித்து வெளியான படம் இது நம்ம ஆளு. இந்த படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரித்ததோடு, தனது இளைய மகன் குறளர சனையும் அந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். முதல் படம் என்பதால் சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்து விட வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டார் குறளரசன். அவருக்கு அவரது தந்தை டி.ஆர்., அண்ணன் சிம்பு இருவருமே பக்கபலமாக இருந்தனர். அப்படத்தின் பாடல் வெளியானபோது சிம்பு ரசிகர்கள் அந்த பாடலை பெரிய அளவில் டிரண்ட் செய்தனர்.
மேலும், இது நம்ம ஆளு படமும் வெற்றி பெற்றது. என்றாலும் அதையடுத்து குறளரசனுக்கு புதிதாக படங்கள் புக்காகவில்லை. சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களுக்கும் வேறு நபர்கள் இசையமைக்கிறார்கள். இந்த நிலையில், வாலு பட டைரக்டர் விஜயசந்தர் மீண்டும் சிம்புவை வைத்து இயக்கும் படத்திற்கு குறளரசன்தான் இசையமைக்கிறார். இந்த படத்தையும் சிம்பு சினி ஆர்ட்ஸே தயாரிக்கிறது. முதல் படத்தில் தனது பாடல்கள் பொது இடங்களில் ஒலிக்காத நிலையில், அடுத்த படத்தில் பட்டிதொட்டியெல்லாம் கலக்கி விட வேண்டும் என்று அதிரடியான பாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறாராம் குறளரசன்.