ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒன்னிரண்டு படங்களில் வில்லனாக நடித்ததும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது வில்லன் நடிகர்களுக்கு. பிரகாஷ்ராஜ் போன்ற சீனியர் வில்லன்கள் கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாவதில்லை. எனவே தமிழ்சினிமாவில் வில்லன் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனாலோ என்னவோ வேறு வழியே இல்லாமல், மும்பை சென்று பாலிவுட் படங்களில் தலைகாட்டியவர்களை வில்லனாக நடிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இயக்குநர்கள்.
மாடலாக இருந்து, 1999ஆம் ஆண்டு வெளிவந்த 'பியார் மே கபி கபி' படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் தருண் அரோரா. அதன் பிறகு ஏழெட்டு பாலிவுட் படங்களில் நடித்த தருண், 'கணிதன்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இப்படத்தில் அதர்வா உடன் மோதும் வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' படத்திலும் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம் தருண் அரோரா. விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் 'கத்தி சண்டை' படத்தை சுராஜ் இயக்குகிறார்.