ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சந்தானம் நடித்துள்ள 'தில்லுக்கு துட்டு' படம் முடிவடைந்து வெளிவரத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்துக்கு தடைகேட்டு பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் நின்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எங்கள் நிறுவனத்தின் சார்பில், 'ஆவி பறக்க ஒரு கதைக் என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தின் இயக்குனராக ராம்பாலா நியமிக்கப்பட்டார். அதற்காக ரூ.11 லட்சம் சம்பளம் பேசி, ரூ.3 லட்சம் அவருக்கு முன்தொகையும் கொடுக்கப்பட்டது. படத்தின் நாயகனாக நடிகர் சிவா, கதாநாயகியாக நடிகை நந்திதா ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்கு முன்தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த படத்துக்காக இதுவரை ரூ.81 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளேன்.
இந்த நிலையில், இயக்குனர் ராம்பாலா, என்னுடைய 'ஆவி பறக்க ஒரு கதைக் படத்தின் கதையை, 'தில்லுக்கு துட்டுக் என்ற தலைப்பில் எடுத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர்கள் தங்களது பண பலத்தினால், இந்த படத்தை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 'தில்லுக்கு துட்டுக் என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக வருகிற 28-ந் தேதி இயக்குனர் ராம்பாலா, நடிகர் சந்தானம் ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும்க் என்று நோட்டீசு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.