ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். முன்னணி நடிகராக இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சல்மானின் இயல்பாகிவிட்டது. சமீபத்தில் அவர் கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது சல்மான், ‛சுல்தான்' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று விட்டு வரும்போது, தான் கற்பழிக்கப்பட்ட பெண் போன்று உணர்ந்ததாக கூறினார். இது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக சல்மான் கான் மீது நடிவடிக்கை கோரி இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவை சேர்ந்த சமூகர் ஆர்வலர் ரப்தாத் ஜமால் என்பவர் லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேப்போன்று கான்பூரில் வக்கீல் ஒருவரும் கான்பூர் கோர்ட்டில் சல்மான் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.