ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெற்றதை அடுத்து சின்னத்திரையில் இருந்து பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஹீரோக்களாகி வருகின்றனர். அதேபோல், சில தொகுப்பாளினிகளும் சினிமாவில் என்ட்ரியாகி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது வைசாலி என்ற தொகுப்பாளினியும் இணைந்துள்ளார். இவர் சில சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர். அதோடு 50க்கும் மேற்பட்ட சினிமா ஆடியோ விழாக்களை தொகுத்து வழங்கியுள்ள வைசாலி, தற்போது ராஜாமந்திரி படத்தில் நடிகையாகியிருக்கிறார்.
இந்த படத்தில் கலையரசன்-ஷாலின் முதல் ஜோடியாக நடிக்க, இன்னொரு ஜோடியாக காளி வெங்கட்- வைசாலி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தனது எதிர்வீட்டில் வசிக்கும் வைசாலிக்கு காளி வெங்கட் காதல் தூது விடுவது. பின்னர் அவரை எதிர்த்த வீட்டு காளி பிளவரே என்று பாடி கலாய்ப்பது என அவர்கள் ட்ரேக் ஜாலியாக இடம்பெற்றிருக்கிறதாம்.
இதுபற்றி வைசாலி கூறுகையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்ததில்லை. ஆனால் நான் தொகுத்து வழங்குவதைப்பார்த்து சிலர் நடிக்க அழைத்து வந்தனர். அப்படித்தான் ராஜாமந்திரி படத்தில் நடித்தேன். இந்த படத்தில் கிராமத்து கதை என்பதால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த வாழ்க்கை முறை புதிதாக உள்ளது. இருப்பினும், உடன் நடித்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால், முடிந்தவரை நன்றாக நடித்து விட்டேன் என்று கூறும் வைசாலி, தொடர்ந்து நல்ல கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்.